Monday, May 29, 2023
Home Blog

உயிர் காக்க உதவுங்கள்: 21 வயது இளைஞர் எலும்பு புற்று நோயால் அவதி!

0

எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு உதவிக்கரம் நீட்ட உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம் கீழ்புத்தூர் கிராமத்தில் வசிக்கும்  தசரதன் என்பவரின் மகன் பிரேம் குமார் (21)  எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ப்ளான்ட் (STEM CELL TRANSPLANT) அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ. 25 லட்சத்திற்கு குறையாமல் செலவாகும் என்பதால் ஏழை விவசாயியான தசரதனுக்காக நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நல்ல உள்ளங்களுக்கு உறுதுணையாக செய்தி களஞ்சியம் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

பிரேம்குமார் என்கிற இந்த இளைஞர் உயிர்காக்க தங்களால் இயன்றதை கொடையாக கொடுத்து உதவுமாறு செய்தி களஞ்சியம் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது.

Gpay 9543847521.
DHASARATHAN
Indian bank- mazhaiyur branch
IFSC: IDIB000M105AC NO: 6554790083

நன்கொடை அளிப்பதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://milaap.org/fundraisers/support-premkumar-10?utm_source=whatsapp&utm_medium=fundraisers-title&fbclid=IwAR0ihLFJ5buktS8_R_BY3qRC-rnxr75Wb3aLSHSC4y0iJ82hZGbeZe9WAEY

சிதம்பரம்; கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி அறிமுகக் கூட்டம்: உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!.

0

புதுச்சத்திரம் காவல் நிலையத்தின் சார்பில், கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி அறிமுகக் கூட்டம் புதுச்சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கடலூர் : சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் பேருந்து நிலையத்தில், கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி (Village vigilance police officer) அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக், கிராம காவலர் அறிமுக கூட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா, கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களையும், இளைஞர்களையும் வரவேற்று கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதோடு ஒவ்வொரு பகுதிக்கும் நியமிக்கப்படும் காவலர்களுக்கு, அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வில்லியநல்லூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் மில்டனை அறிமுகம் செய்து வைத்து பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும் சம்பந்தப்பட்ட கிராமத்திலுள்ள பொதுமக்கள், இளைஞர்கள் அந்த காவலருடன் தொடர்பில் இருந்து குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்ற என்று கேட்டுக்கொண்டார்.

கிராமங்களில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்தும், சந்தேகத்திற்கிடமாக நடமாடும் நபர்கள் குறித்தும், சட்டவிரோதமாக நடைபெறும் செயல்கள் குறித்தும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம். கிராமங்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளைப் பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தால் அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும், முன்னேற்பாடுகளை செய்யவும் பொறுப்பு அதிகாரி ஒத்துழைப்பு வழங்குவார்.

உங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட காவலரிடம் நீங்கள் விவாதிக்கலாம், நீங்கள் எந்தத் துறை குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தீர்களோ அந்தத் துறையின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான வசதிகளை சம்பந்தப்பட்ட காவலர் செய்து தருவார். இதனால் கிராமங்களில் குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப் படுவதோடு கிராமப்புறங்கள் மேம்பாடு அடைவதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இறுதியில் மீண்டும் பேசிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா, புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குள் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு காவலருக்கு குறைந்தது 5 அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடிய காவல் துறையினருக்கு, தங்கள் பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படும் காவலருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து குற்றங்களை முன்கூட்டியே தடுக்க உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறினர்.

நிகழ்ச்சியில் துணை காவல் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சிவகுருநாதன், சுப்பிரமணியன், காவலர்கள் முத்துக்குமார் (தனிப் பிரிவு) வெற்றிவேல், திருஞானம், பாலமுருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இராஜராஜன் சதயவிழா 1035: உடையாளூர் பள்ளிப்படையில் சோழ வாரிசுகளின் தலைமையில் குதூகலவிழா!.

0

தமிழக மன்னர்களில் பேரரசனாக விளங்கிய இராஜகேசரி இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மனுக்கு உடையாளூர் கிராம மக்களும், சிவபாதசேகரன் சதய விழா குழுவினரும் இணைந்து சதய விழா எடுத்து சிறப்பித்துள்ளனர்.

தரணி ஆண்ட பேரரசன் இராஜராஜனுக்கு தஞ்சையில் விழா எடுப்பது அனைவரும் அறிந்ததே. உடையாளூர் என்கிற பழையாறையில் கடந்த சில வருடங்களாக இராஜராஜ சோழனுக்கு சதயவிழா நடந்து வருகிறது. கடந்த வருட சதயவிழாவின் போது சிவபாதசேகரன் சதய விழா குழுவினரின் முயற்சியால் இராஜராஜனுக்கு பஞ்ச உலோகங்களினால் ஆன ஐம்பொன் சிலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாதம் வளர்பிறை சதய நட்சத்திரத்தில் பிறந்த அருள்மொழி வர்மன், இராஜகேசரி இராஜராஜ சோழன் என்ற பெயரால் பட்டம் சூட்டப்பட்டதும் சதய நட்சத்திர தினத்தில்தான் என்பதால் இராஜராஜ சோழனுக்கு ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சதய நட்சத்திர தினத்தில் சிறப்பான முறையில் சதயவிழா நடத்தி வருகின்றனர்.

உடையாளூர் சதயவிழாவின் முக்கியத்துவம்

சோழர்களின் வரலாறு முழுக்க ஆராயும் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சோழர்களின் தலைநகரம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது புலனாகும். பூம்புகார் தொடங்கி உறையூர், பழயாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் இன்றைய பிச்சாவரம் வரை அந்த பட்டியல் நீளும்.

பிற்கால சோழர்களின் முதல்வன் விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி தனது தலைநகரை தஞ்சை அரண்மனைக்கு மாற்றுவதற்கு முன்னால் பழையாறை என்கிற இன்றைய உடையாளூர் சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. இராஜராஜ சோழன் காலம் வரையிலும் பழையாறைக்கு முக்கியத்துவம் இருந்தது, கீழ் திசை முழுவதும் கட்டியாண்ட மதுராந்தகன் என்கிற கோப்பரகேசரி முதலாம் இராஜேந்திர சோழன் முடிசூட்டு விழாவிற்கு பிறகு பழையாறை அரண்மனைக்கு ஒய்வெடுக்க சென்ற இராஜராஜ சோழன் அங்கேயே மரணமடைந்ததால் பள்ளிப்படை கட்டப்பட்டதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

இராஜராஜ சோழன் பள்ளிப்படை கட்டப்பட்ட அன்றைய “பழையாறை” இன்றைய உடையாளூரில், சோழ வாரிசுகளான ராணி சாந்திதேவி ஆயாள் முன்னிலையில் இளவரசர் மன்னர் மன்னன் தலைமையில் புலிக் கொடி ஏற்றப்பட்டு சதயவிழா தொடங்கியது. காலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் உடையாளூரை சேர்ந்தவர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து சென்றவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கொடியேற்றத்திற்கு பின்பு பள்ளிப்படையில் கணபதி ஹோமம், அஸ்திர ஹோமம், ருத்ர ஹோம் முதலான ஹோமங்கள் நடந்தன, மங்கள் வாத்தியங்கள் முழங்க 108 வலம்புரி சங்குகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு இராஜராஜ சோழனின் சதயவிழா குதூகலமாக கொண்டாடப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை : அக்னி பிழம்பாய் காட்சியருளிய அருணாச்சலேசுவரர்!

0

இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து வழிபட்டு நம்முன்னோர் ஆனந்த பரவசம் எய்தினர்.

இவற்றில் ‘தீ’ என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது. சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது.

பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.

வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்

 எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும் அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக தோன்றினார்.

இறைவனின் அருளை வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து விட்டார். பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார்.

இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.

பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.

கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன.

இறைவன் பெயர் – அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்)
இறைவி பெயர் – உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்)
புகழ் பெற்ற விழா – திருகார்த்திகை தீபம்
விழா காலம் – கார்த்திகை மாதம்.